மாரடோனாவுக்கு மூளையில் இரத்த உறைவு பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரத்தில் இதற்காக அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில் தற்போது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறந்த மாரடோனா 1997ஆம் ஆண்டு ஓய்வுபெற்று, 2008-2010ஆம் ஆண்டில் அர்ஜண்டினா அணிக்குப் பயிற்சியாளராகச் செயல்பட்டார். இவருக்கு மொத்தம் நான்கு மனைவிகள், 5 குழந்தைகள் உள்ளனர். 20 வயதில் ஒரு மனைவி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Mobile AppDownload Get Updated News