Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஒலிம்பிக் ஒராண்டு ஒத்திவைப்பில் இவ்வளவு சிக்கலா?

$
0
0

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. இதற்கிடையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு கருதி ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

மாறுபட்ட அணி
இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டிற்கு ஒத்திவைப்படுவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கப்பட்ட முடிவு மிகவும் தவறானது என சிலர் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு துவங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் முற்றிலும் மாறுபட்ட அணியாக காட்சி அளிப்பார்கள்.

சீனியர்கள் ஓய்வு
சில சீனியர் வீரர்கள் இன்னும் ஓராண்டு காத்திருக்க முடியாது என்பதால், ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இதனால் ஜூனியர் வீரர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க 74 இந்தியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற சில இந்திய வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு செயளாலர் ராஜூவ் மேத்தா சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா தாக்கத்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு ஒத்திவைப்பு!

கனவு கலைந்தது
இதுவரை நடந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளில் வரலாற்றில் கடந்த 1992 (சம்மர் ஒலிம்பிக்) மற்றும் 1994 இல் (குளிர்கால ஒலிம்பிக்) இரண்டு ஆண்டுகள் இடைவேளையில் நடத்தப்பட்ட ஒலிம்பிக்கிற்கு, வெறும் 42 சதவீதம் வீரர்கள் மட்டுமே தகுதி பெற்றனர்.

அதேபோல ஒரு ஒலிம்பிக்கிற்கும் அடுத்த 4 ஆண்டுக்கு பின் நடக்கும் ஒலிம்பிக்கிற்கும் தகுதி பெறும் வீரர்கள் வெறும் 27 சதவீதம் தான் என தெரியவந்துள்ளது. இதனால் தற்போதைய ஒலிம்பிக் போட்டிகள் ஓரண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், தற்போது தகுதி பெற்றவர்களில் வெறும் 50 முதல் 60 சதவீதம் வீரர்கள் மட்டுமே அடுத்தாண்டு போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதன்படி பார்க்கும் போது 5ல் 2 வீரர்களின் ஒலிம்பிக் கனவு இந்த ஒத்திவைப்பு அறிவிப்பின் போதே தகர்ந்துவிட்டது.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


கடல் கன்னியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா


அண்ணியும் நானும் அடைந்த சுகம்.


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


பக்தர்கள் வேண்டும் வரத்தை தரும் வராஹி அம்மன்


பாக்கியசாலிகளாக்கும் காமாட்ஷி அம்மன் நவாவரண பூஜை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...