இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஆண்டுதோறும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பாரம்பரியமாக நடத்தப்படும் டென்ன்னிஸ் தொடரில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதாக டென்னிஸ் இண்டிகிரிட்டி யூனிட்டுக்கு (டி.ஐ.யூ.,) புகார் வந்தது.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற தொடர்களில் இதுபோன்ற புகார்கள் வருவது வழக்கமான விஷயம் என்றாலும், இம்முறை அளவுக்கு அதிகமாக கடந்த ஜூலை மாதம் முதல் சுமார் 96 புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஐ.யூ., வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களுக்கு இது போன்ற புகார்கள் வருவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இது வரை இவ்வளவு புகார்கள் வந்ததில்ல்லை. இவை அனைத்தும் ரகசியமாக விசாரிக்கப்படும்,’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
Mobile AppDownload Get Updated News