பிரேசிலின் ரியோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவல், அதிர்ச்சி தோல்வியடைந்து விரைவாக வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனால் இவருக்கு பதிலாக புது புயலாக வீசிய இளம் வீராங்கனை சிந்து, வெள்ளிப்பதக்கம் வென்று ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
இதன் பின் நாடுதிரும்பிய சாய்னாவிக்கு மூட்டுப்பகுதியில் ஏற்பட்ட காயத்துக்காக ஆப்ரேஷன் செய்யப்போவதாக, சாய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
தற்போது அவருக்கு ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சாய்னாவுக்கு ஆப்ரேஷன் செய்த மருத்துவர் கூறியது:
சாய்னாவின் வலது மூட்டின் உட்பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்துக்காக ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அவர் ஒருநாள் ஓய்வுக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஆனால் குறைந்தது 3 வாரங்கள் கட்டாயம் ஓய்வு எடுக்கவேண்டும். அவர் விளையாட்டு வீராங்கனையாக உள்ளதால், அதன்பின் மருத்துவர்கள் அறிவுரைப்படி போட்டிகளில் பங்கேற்கலாம். ஆனால், அவரின் காயம் முழுமையாக குணமடைய முழுமையாக 4 மாதங்கள் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Mobile AppDownload Get Updated News