Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

எதிரி மெஸ்சியுடன் ‘டின்னர்’ சாப்பிட ஆசை : கிறிஸ்டியானோ ரொனால்டோ!

$
0
0

சர்வதேச கால்பந்து அரங்கை சுமார் 15 ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வரும் எதிர் எதிர் திசை வீரர்களான போர்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மற்றும் அர்ஜெண்டினாவின் லயோனல் மெஸ்சி. இதற்கு முன் கால்பந்து அரங்கில் இப்படி ஒரு வீரர்கள் இருந்த சரித்திரமே கிடையாது.

விடைபெற்ற ரொனால்டோ.....
இதற்கிடையில் சமீபத்தில் ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் அணியில் இருந்து இத்தாலியின் ஜூவாண்டஸ் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த மாற்றம் மெஸ்சி இடம் பெற்றுள்ள பார்சிலோனா அணிக்கும் ரியல் மாட்ரிட் அணியின் 9 ஆண்டு பகையை முடித்து வைத்தது.

விர்ஜில் வான்...
இதற்கிடையில் ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோவை ஓரங்கட்டி லிவர்பூலின் விர்ஜில் வான் டிக் இம்முறை தட்டிச்சென்றார்.

70911702

நினைவு தெரிந்து
இதுகுறித்து ரொனால்டோ கூறுகையில், ‘நானும் மெஸ்சியும் சுமார் 15 ஆண்டுகளாக கால்பந்து உலகை பகிர்ந்து வருகிறோம். கால்பந்து உலகை இத்தனை ஆண்டுகள் ஆதிக்கத்துடன் எந்தவீரர்களும் பகிர்ந்து கொண்டதாக எனக்கு நினைவில்லை.

இது ரொம்ப நல்லது
இந்த 15 ஆண்டுகளில் அவரும், நானும் எங்களை மாறி மாறி நகர்த்திக்கொண்டே சென்றுள்ளோம். இது சர்வதே கால்பந்து அரங்கில் ஆரோக்கியமான விஷயம். எங்களுக்குள் ஒரு நல்ல உறவு உள்ளது. இதுவரை மெஸ்சியுடன் டின்னர் சாப்பிட்டதில்லை. எதிர்காலத்தில் சாப்பிட ஆசை.


எப்போது ஓய்வு
மெஸ்சி என்னைவிட இரண்டு வயது சிறியவர். ஆனால் எனது வயதில் நான் ஆரோக்கியமாகத்தான் உள்ளேன். அதனால் இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் விளையாடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.’ என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்