Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

நாடு திரும்பிய தங்கமங்கை சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு: பிரதமர் மோடியை சந்திக்கிறார்!

சுவிட்சர்லாந்தின் பசலில் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றைய பிரிவில் இந்தியாவின் நட்சத்திர நாயகி பிவி சிந்து, தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் அரங்கில் தங்கப்பதக்கம் வென்று முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சிந்து.

உருக்கம்:
நீண்ட காலமாக தவறவிட்ட பதக்கத்தை தற்போது அடைந்துள்ள மகிழ்ச்சி குறித்து ட்விட்டர் மூலம் உருக்கமாக பகிர்ந்துகொண்டார் சிந்து. இந்நிலையில் இன்று காலை நாடு திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமருடன் சந்திப்பு:
தன் வெற்றிக்கு தனது பெற்றோர் மற்றும் பயிற்சியாளர்களுக்கு சிந்து நன்றி தெரிவித்தார். இந்நிலையில் இன்று இந்திய பிரதமர் மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜூஜூ ஆகியோரை சிந்து சந்திக்கவுள்ளார்.

70854641

ரசிகர்களுக்கு நன்றி:
இதுகுறித்து சிந்து கூறுகையில், ‘நாட்டுக்காக இன்னும் நிறைய பதக்கங்கள் வாங்க வேண்டும் என்பதே என் விருப்பம். இந்நேரத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வேண்டுதல் மற்றும் ஆசியால் தான் இந்தளவு சாதிக்க முடிந்தது.


இந்தியராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். பதக்கம் வென்ற பின் இந்திய தேசியக்கொடி, மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது என் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. உலக சாம்பியன்ஷிப் வெற்றியை வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது.’ என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>