சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து போட்டி சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 6ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரியா, வங்கதேசம், இந்தோனேசியா, ரஷ்யா உட்பட 15 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டியில் 21 அணிகளில் 168 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். இதற்கான அறிமுக விழா நேற்று சிறப்பாக நடந்தது. போட்டிகள் அனைத்தும் மாலை 4.30 மணி முதல் 7.30 மணி வரை நடக்கும்.
இந்த போட்டிகளுக்கான துவக்க விழா வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கவுள்ளது. இதில் முதன்மை விருந்தினராக இசைஞானி இளையராஜா பங்கேற்று போட்டிகளை துவங்கி வைக்கவுள்ளார்.
Mobile AppDownload Get Updated News