தாய்லாந்தில் ஆண்டுதோறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 47வது தொடர் தற்போது நடக்கிறது. இதில் இரண்டு கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த அணிகள் பங்கேற்கும்.
இந்தியா பங்கேற்பு:
இந்த ஆண்டுக்கான தொடரில் நடப்பு சாம்பியனான சுலோவாகியா பங்கேற்கவில்லை. அதற்கு பதிலாக வடக்கு, மத்திய மற்றும் கரீபிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் குராகாவு அணி பங்கேற்றது. ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பாக வியட்நாம், இந்தியா அணிகள் பங்கேற்றது.
இதன் அரையிறுதியில் குராகாவு அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி, மூன்றாவது இடத்துக்கான போட்டியில், தாய்லாந்து அணியை எதிர்கொண்டது. இதில் துவக்கம் முதல் இந்திய அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
Mobile AppDownload Get Updated News