எகிப்த் தலைநகர் கைரோவில் பெண்கள் பிளாக் பால் ஸ்குவாஷ் ஓபன் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் முன்னணி ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பங்கேற்கிறார். இதன் முதல் போட்டியில் ஜோஸ்னா, மலேசியாவின் நிகோல் டேவிட்டை வீழ்த்தினார்.
தொடர்ந்து இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தின் சாரா ஜேன் பெர்ரியை வீழ்த்திய ஜோஸ்னா காலிறுதிக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் உலகின் 5ம் நிலை வீராங்கனையான நியூசிலாந்தின் ஜோலி கிங்கை எதிர்கொண்டார்.
இறுதியில் 7-11, 12-10, 2-11, 11-5, 11-8 என்ற புள்ளி கணக்கில் ஜோஸ்னா சின்னப்பாவை வீழ்த்திய ஜோலி கிங் அரையிறுக்குள் நுழைந்தார்.
Mobile AppDownload Get Updated News