இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர். இவர், ஜகார்த்தாவில் நடந்த ஆசிய போட்டிகளில் காயமடைந்த பின், கடந்த நவம்பர் 2018ல் ஜெர்மனியில் நடந்த ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பையின் போல் வால்ட் பிரிவில் இந்தியாவின் தீபா கர்மாகர் வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக் திட்டம்:
இருந்தாலும் கடந்த பிப்ரவரி மாதம் மெல்போனில் நடந்த உலக கோப்பையை தீபா கர்மாகர் புறக்கணித்தார். இந்நிலையில் பாகு (மார்ச்14-17 ) மற்றும் தோஹாவில் (மார்ச் 20-23) நடக்கவுள்ள ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரில் அசத்தி, டோக்கியோ ஒலிம்பிக் இடத்தை உறுதி செய்ய தீபா திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து தீபா கர்மாகர் கூறுகையில், ‘ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக சில சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் இடத்தை உறுதி செய்வதுடன், அதற்கான நல்ல பயிற்சியாக இருக்கும்’ என்றார்.
Mobile AppDownload Get Updated News