Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

‘சர்பிங்கில்’ சர்வதேச அளவில் சாதிக்க காத்திருக்கும் தான்வி: கண்டுகொள்ளுமா அரசு?

$
0
0

சிங்கப்பூரில் வரும் நவம்பர் 17,18ல் சர்வதேச சிங்கப்பூர் ஓசன் கோப்பைக்கான சர்பிங் போட்டிகள் நடக்கவுள்ளது. இதைத்தொடர்ந்து பிரான்ஸில் பாரீஸில் எஸ்.யூ.பி., கோப்பை சர்பிங் தொடர் வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்குகிறது.

இந்த இரண்டு சர்வதேச சர்பிங் தொடர்களிலும் கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயதான தான்வி ஜெகதீஷ் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். இதுவரை சர்வதேச அளவில் ஆறு பதக்கங்களை குவித்துள்ள தான்வி, இத்தொடர்களிலும் சாதிக்கும் தன்னப்பிக்கையுடன் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்தொடர்கள் வரும் 2024ல் நடக்கவுள்ள சர்பிங் உலகக்கோப்பையில் சாதிக்க சிறந்த பயிற்சியாகவும் அமையும் என நம்புவதாக தான்வி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தான்வி டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், ‘நான் எனது விளையாட்டை மிகவும் நேசிக்கிறேன். தினமும் அதிகாலை 3.30 மணிக்கே எழுந்துவிடுவேன். பின் மெடிடேசன், யோகா, தொடர்ந்து 5.30 மணிக்கே குளித்துவிட்டு பயிற்சிக்கு கிளம்பிவிடுவேன். சுமார் 5 மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன்.’ என்றார்.
66266013

அரசு உதவி இல்லை:
சர்பிங் போட்டிகள் இந்தியாவில் இன்னும் ஆரம்ப கட்டத்தில் உள்ளதால், அரசு இதற்கான வீரர்களுக்கு உதவ முன்வருவதில்லை. இதனால் அடுத்த மாதம் சீனாவில் நடக்கும் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை தான்வி தவறவிட்டுள்ளார். இது தனி நபர் போட்டிகள் என்பதால் தான்வி தனக்கான ஸ்பான்சர்களை தேடி வருகிறார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>