ஜகர்தாவில் நடைபெற்றுவரும் பாரா ஆசிய விளையாட்டின், ஈட்டி எறிதல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை ரம்யா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
சத்தியமங்கலம் அடுத்துள்ள நாகரணை கிராமத்தை சேர்ந்தவிவசாயி சண்முகம் மகள்ரம்யா. இடது கையில் குறைபாடு உள்ள இவர், தற்போது இந்தோனேசியா தலைநகர் ஜகர்தா நகரில் நடைபெற்று வரும் 3வதுபாரா ஆசிய போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இதில் நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவுக்கான ஈட்டிஎறிதல் போட்டியில் ரம்யா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் அவர் தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News