பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில், ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள் பதக்கத்தை தங்களது பற்களால் கடிப்பது பொதுவாக விஷயம்.
ஆனால் தற்போதைய பாராலிம்பிக் போட்டிகளில் பார்வையற்ற வீரர்கள் தங்களது பதக்கத்தை காதருகில் கொண்டு செல்வது வழக்கமாக கொண்டிருந்தனர். இதற்காக விளக்கம் தற்போது தெரியவந்துள்ளது.
சர்வதேச பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்லும் பார்வையற்ற வீரர், வீராங்கனைகளுக்காக பிரத்யேக பதக்கங்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தங்களின் பதக்கத்தை பார்க்க முடியாவிட்டாலும், அதை கேட்க முடியும்.
இதற்காக வெண்கலப்பதக்கத்திற்குல் சுமார் 16 இரும்பு குட்டிப்பந்துகளை வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறைந்த சத்ததை வெளிப்படுத்தும். இதே போல வெள்ளிப்பதக்கத்தில் 20 பந்துகளும், தங்கப்பதக்கத்தில் 28 பந்துகளும் இருக்கும். தங்கப்பதக்கத்தில் தான் அதிக சத்தம் வரும்.
Mobile AppDownload Get Updated News