Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

பாரா ஆசிய போட்டியில், இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம்!

$
0
0

ஆசிய பாரா போட்டியில் ஈட்டி எறிதல், நீச்சல், ஓட்டப்பந்தயம் ஆகிய மூன்று போட்டிகளில் வென்று. இன்று ஒரே நாளில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியா 3 தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

அதன்படி, ஈட்டி எறிதல் போட்டியில் ஆடவர் பிரிவில் கலந்து கொண்ட இந்திய வீரர் சந்தீப் செளதரி, 60.01 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து முதலிடம் வென்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே போல், நீச்சல் போட்டியில் ஆடவர் பட்டர்ஃபிளை 50மீட்டர் பிரிவில் இந்திய வீரர் ஜாதவ் சுயாஷ் நாராயண் கலந்து கொண்டு முதலிடம் பிடித்தார். மேலும், ஓட்டப்பந்தயத்தில், 1500மீட்டர் ஓட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வீராங்கணை ரஜூ ரக்ஷிதா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

ஏற்கனவே, நேற்று ஞாயிறன்று நடந்த போட்டியில், இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சலில் S-10 பிரிவில் தேவான்ஷி சத்திஜவான் வெள்ளி வென்றார். சுயாஷ் ஜாதவ் 200 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் SM-7 பிரிவில் வெண்கலம் வென்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


பழம்பெரும் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் காலமானார்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1883 - கேள்விகளுக்கு அகத்தியப் பெருமானின் பதில்கள்!


நடிகைகள் கூட்டமைப்பிலிருந்து விலகுகிறார் மஞ்சுவாரியர்


நுழைவுத்தேர்வு


புழல் சிறையில் கைதி கொலை எதிரொலி : உதவி ஜெயிலர், வார்டன் சஸ்பெண்ட்


திருமூலர் அருளிய உயிர்காக்கும் ரகசிய மந்திரம்


வேலூர் மார்க்கெட்டில் வரத்து அதிகரிப்பு முலாம் பழம் கிலோ ரூ.30 க்கு விற்பனை


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சேரி பிகேவியர்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>