It was indeed a good start to the @asianpg2018 for India! With a total of 6 medals already won, we’re excited for… https://t.co/uyAohO0Ib0
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை இந்தோனேஷியாவில் தொடங்கியது. அக்டோபர் 16ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் முதல் நாளில் இந்தியா 5 பதக்கங்கள் வென்றுள்ளது.
முதலில் ஆண்கள் அணிக்கான பேட்மிண்டன் போட்டியில் அரையிறுதியில் மலேசிய அணியிடம் 1-2 என நூலிழையில் தோல்வி அடைந்ததால் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றது.
பளு தூக்குதல் 49 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பர்மான் பாஷா வெள்ளிப்பதக்கம் வென்றார். பரம்ஜீத் குமார் வெண்கலத்தைத் தட்டிச்சென்றார். பர்மான் 128 கிலோ எடையும் பரம்ஜீத் 127 கிலோ எடையையும் தூக்கினர்.
முதல் நாள் முடிவில் இரண்டு வெள்ளி, மூன்று வெண்கலம் உட்பட 5 பதக்கங்களை இந்தியா வசப்படுத்தியுள்ளது.
Mobile AppDownload Get Updated News