போர்ச்சுக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் 2009ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் உள்ள நட்சத்திர விடுதியில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் எனவும் அதை மறைக்க ரூ. 3 கோடி (இந்திய மதிப்பில்) வரை பணம் தருவதாக பேரம் பேசினார் எனவும் அமெரிக்காவை சேர்ந்த மாடல் அழகி கேத்ரின் மேயோர்கா புகார் அளித்தார்.
இதனையடுத்து லாஸ்வேகாஸ் நீதிமன்றம் ரொனால்டோ இன்னும் 20 நாட்களில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் கால்பந்து உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ரொனால்டோ இந்த புகாரை முற்றிலுமாக மறுத்துள்ளார். மேயோர்காவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் தன் நற்பெயரை கெடுக்க சதி வேலை நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News