பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிகயில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தவர் திபா கர்மாக்கர். இவர் சில தசம புள்ளிகள் வித்தியாசத்தில் பதக்க வாய்ப்பை தவறவிட்ட போதும், ஒட்டு மொத்த இந்தியர்களின் மனதில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.
டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் தனது கடந்த காலத்தில் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,' ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன், நான் யாரிடமாவது ஜிம்னாஸ்டிக் வீராங்கனை என்று சொன்னால், அவர்கள் கொஞ்சம் கூட யோசிக்காமல் ஜிம்னாஸ்டிக்னா சர்க்கஸ்ல செய்வாங்கலே அதானா? என்று கேள்வி கேட்டு என் மனதை நோகடிப்பார்கள். பின் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற போது பதக்கம் வெல்ல வேண்டும் என நெருக்கடி அளித்தார்கள். ஆனால் இதை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு, ஒலிம்பிக்கில் எனது திறமை முழுவதையும் மட்டுமே வெளிப்படுத்தினேன். என்றார்.
இதே போல முன்னதாக மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக்,' ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லும் போது தனியாளாக சென்றேன். திரும்பும் போது, ஒட்டுமொத்த இந்தியாவே எனக்காக இருப்பதைக்கண்டு மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்திருந்தார்.
Mobile AppDownload Get Updated News