The star of the show has been once again the chair umpire. Second time in this US Open and third time for Serena in… https://t.co/Dr5F0F7Jil
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற 138வது யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் அமெரிக்காவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், ஜப்பனின் நயோமி ஒசாகாவை எதிர்கொண்டார்.
அபராத புள்ளிகள்:
இதில் துவக்கம் முதல் சொதப்பலாக ஆடிய செரினா 2-6, 4-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதன் மூலம் ஜப்பானின் நயோமி ஒசாகா கிராண்ட்ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் முதல் முறை சாம்பியன்பட்டம் வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார்.
திருட்டுப்பயலே:
இந்நிலையில் இப்போட்டியில் பயிற்சியாளிடம் ஆலோசனை பெற்றது . டென்னிஸ் ராக்கெட்டை சேதப்படுத்தியது, உள்ளிட்ட காரணத்துக்காக அபராத புள்ளிகள் வழங்கப்பட்டது. தவிர, அம்பயர் கார்லோஸ் ராமோசை திருடன் என்று திட்டினார். இதற்கும் அபராத புள்ளிகள் நயோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது.
கொந்தளித்த செரினா:
இந்நிலையில் இதுகுறித்து செரினா கூறுகையில், ‘அவர் என்னை ஏமாற்றுக்காரி என்றார். ஆனால் நான் ஏமாற்றவில்லை. அதேபோல களத்தில் இருந்த போது பயிற்சியாளரிடம் ஆலோசனை பெற்றேன் என்றார். அதையும் நான் செய்யவில்லை. அவர் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என பார்த்தேன்.
பாலியல் பாகுபாடு:
டென்னிஸில் பாலியல் பாகுபாடு உள்ளது. ஆண் போட்டியாளர்கள், பலர் அம்பயரை கேவலமாக பேசியுள்ளார்கள். அதற்காக அம்பயர்கள் அவர்களின் போட்டியில் அபராத புள்ளிகளை எடுக்க மாட்டாரகள். நான் பெண் என்பதால், இதை அவர் செய்தார். நான் பெண்களின் உரிமைக்காகத்தான் பேசினேன். அதற்கு சமீபத்தில் நடந்த சட்டையை மாற்றிய கார்னட்டின் நிகழ்வே சிறந்த எடுத்துக்காட்டு. இந்த போராட்டம் எனக்கு பயன் அளிக்காமல் இருக்கலாம், கண்டிப்பாக அடுத்து வரும் வீராங்கனைகளுக்கு உதவும்.’ என்றார்.
பயிற்சியாளர் பல்டி:
இந்நிலையில் செரினாவின் பயிற்சியாளர் மார்டோகுலு இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘இப்போட்டியில் இறுதியாக நட்சத்திரமாக ஜொலித்தது சேர் அம்பயர் தான். போட்டியின் முடிவை தீர்மானிக்க அவரின் தலையீடு உள்ளது என்றால், இது மீண்டும் நடக்காமல் எப்போது முடிவெடுக்க போகிறோம்.’ என குறிப்பிட்டுள்ளார்.
தவிர, தான் பயிற்சியைப்பற்றி தான் பேசினேன் என்றும், ஆனால் செரினா தன்னை பார்த்தது தனக்கு தெரியாது என்றும் மார்டோகுலு ஒப்புக்கொண்டார். ஆனால் செரினா இதை மறுத்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Mobile AppDownload Get Updated News