அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற 138வது யு.எஸ்., ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் உலகின் 55வது நிலை வீரரான ஜான் மில்மானை, நம்பர்- 2 வீரரான சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் எதிர்கொண்டார்.
இதில் ரோஜர் பெடரர் 6-3, 7-5, 7-6, 7-6 என்ற செட்களில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். இந்நிலையில் இப்போட்டியில் மூச்சு விட முடியாத நிலை ஏற்பட்டதாக பெடரர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பெடரர் கூறுகையில், ‘தோல்வியடைந்த போட்டி அன்று மிகவும் சூடாக உணர்ந்தேன். சுத்தமாக கற்றோட்டமே இல்லை. இந்த நிலையை சமாளிக்க மிகவும் தத்தளித்தேன். எனக்கு இது போல நடப்பது இதுவே முதல் முறை. மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். போட்டி போகப்போக வியர்த்து கொட்டியது. இதை ஜான் சமாளித்தார். ஒருவேளை மிகவும் சூடான பகுதியான பிரிஸ்பேனில் இருந்து வந்தவர் என்பதால் எளிதாக சமாளித்து விட்டார் என நினைக்கிறேன்.’ என்றார்.
Mobile AppDownload Get Updated News