18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா மற்றும் பால்ம்பேங் நகரங்களில் ஆகஸ்டு 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெறுகிறது.
இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 40 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் கலந்துகொண்டார். இதில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் ஹசன்பாய் டஸ்மடோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
3-2 என்ற புள்ளிக்கணக்கில் வென்று அசத்திய அவர் தற்போதைய ஆசிய விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் முதல் பதக்கத்தைப் பெற்றுத்தந்திருக்கிறார்.
இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா பெற்றுள்ள அதிகபட்ச பதக்கமாகும். முன்னதாக 2010ஆம் ஆண்டு இந்தியா 65 பதக்கங்களைப் பெற்றது.
Mobile AppDownload Get Updated News