Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

வெள்ளி வென்ற டூடி சந்துக்கு 3 கோடி ஊக்கத்தொகை அறிவித்த ஒடிசா முதல்வர்

$
0
0

ஆசியா விளையாட்டு போட்டியில் இரட்டை வெள்ளிப் பதக்கத்தை வென்ற இந்திய வீராங்கனை டூடி சந்த்துக்கு பரிசுத் தொகையை அறிவித்துள்ளார் ஒடிசா முதல்வர்.

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2018, இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா, ஜகார்த்தா பாம்பெம்பங் நகரில் நடைப்பெற்று வருகின்றது.

இந்த போட்டி தொடரில், பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட டூடி சந்த் வெள்ளிப் பதக்கம் வென்றார். உடனே வெள்ளி வென்றதற்காக ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்னாயக் ரூ. 1.5 கோடி பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று நடந்த 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் டூடி சந்த் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இதையடுத்து 200 மீ பிரிவில் வெள்ளி வென்றதற்காக தனியாக 1.5 கோடி ரூபாய் வழங்குவதாக நவீன் பட்னாயக் மீண்டும் அறிவித்துள்ளார்.


இதனால் 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை டூடி சந்த் பெற உள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>