தேசிய மாணவர் படையை சேர்ந்த 40 மாணவ, மாணவிகள் புதுவையில் இருந்து பெருங்கடல் சாகச பாய்மர படகு பயணத்தை தொடங்கினர். 450 கி.மீ. தொலைவுக்கான இந்தக் பயணத்தை ஜூலை 12ஆம் தேதி ஆரம்பித்தனர். இந்தப் பயணம் இன்று கடலூர் முதுநகரில் நிறைவு பெற்றது.
இந்நிலையில், சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீராம் ஸ்ரீநிவாஸ் என்ற மாணவர் இன்று கடலூர் முதுநகரில் இருந்து கடலூர் வெள்ளிக் கடற்கரை வரை சுமார் 5 கி.மீ. நீந்தி சாதனை படைத்தார்.
பிறவியிலேயே பேச முடியாமலும் நடக்க முடியாமலும் போன இவருக்கு மனவளர்ச்சியும் பிறப்பிலேயே குன்றியிருந்தது. இருப்பினும் பெற்றோரின் ஈடுபாட்டுடன் 4 வயதிலிருந்து ஹைட்ரோதெரபி (Hydrotherapy) என்ற நீச்சல் பயிற்சி பெற்றார் ஸ்ரீராம்.
Mobile AppDownload Get Updated News