Welcome to the club & congrats Praggnanandhaa!! See u soon in chennai? சதுரங்க போட்டியில் சர்வதேச அளவில் தொடர் வாகைகள் சூடி உலகின் இரண்டாம் இளம் Grandmaster என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்… https://t.co/Nwy2L4UZfK Just 12 yrs old, Chennai boy R Praggnanandaah has become the second youngest Chess Grand Master ever! Congratula… https://t.co/GKUODChh51 Congratulations and best wishes to Praggnanandhaa for becoming India's youngest Chess Grandmaster and 2nd youngest… https://t.co/sLiePMO7HR
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்) சிறுவன், இத்தாலி ஆர்டிசியில் நடக்கும் கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டாா். தனது 9வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514 புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, அவர் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
விஸ்வநாதன் ஆனந்த்
உலக சாதனை படைத்துள்ள சென்னை சிறுவா் பிக்ஞானந்தாவிற்கு தலைவா்கள் பலரும் வாழ்த்து தொிவித்து வருகின்றனா். இது குறித்து செஸ் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் “கிராண்ட் மாஸ்டா் கிளப் உங்களை வரவேற்கிறது. சென்னையில் சந்திப்போம்” என்று குறிப்பிட்டுள்ளாா்.
ஓ.பன்னீா்செல்வம்
தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் “சதுரங்க போட்டியில் சர்வதேச அளவில் தொடர் வாகைகள் சூடி உலகின் இரண்டாம் இளம் Grandmaster என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தி, இந்தியாவை பெருமையடையச் செய்த சென்னையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஆர்.பிரக்ஞானந்தா மென்மேலும் சாதனைகளைத் தொடர எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளா்ா.
ராகுல்காந்தி
இதே போன்று காங்கிரஸ் கட்சியின் தலைவா் ராகுல் காந்தி “யாராலும் மறுக்க முடியாத மற்றும் நம்பமுடியாத சாதனையை படைத்துள்ள 12 வயதே ஆன சென்னை சிறுவன் பிரக்ஞானந்தா மற்றும் அவரது பயிற்சியாளா் ரமேஷ்க்கு எனது வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளாா்.
மு.க.ஸ்டாலின்
தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான ஸ்டாலின் “இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டா் மற்றும் உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டா் என்ற சாதனையை படைத்த பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.
கமல்ஹாசன்
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் பிரக்ஞானந்தாவின் தந்தையை தொடா்பு கொண்டு தனது வாழ்த்தை தொிவித்துள்ளாா். மேலும் பிரக்ஞானந்தாவின் சாதனை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கிடைத்த பெருமை என்று புகழாரம் சூட்டி உள்ளாா்.
மேலும் பல்வேறு தலைவா்களும் பிக்ஞானந்தாவிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனா்.
Mobile AppDownload Get Updated News