Welcome to the club & congrats Praggnanandhaa!! See u soon in chennai?
சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா என்ற 12 வயது (10 மாதங்கள் மற்றும் 13 நாட்கள்) சிறுவன், இத்தாலி ஆர்டிசியில் நடக்கும் கிரிடின் ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.
தனது 10 வயதிலேயே இன்டர்நேஷனல் மாஸ்டர் பட்டம் வென்று சாதனைப் படைத்த பிரக்ஞானந்தா, கிராண்ட் மாஸ்டராக, Elo ரேட்டிங்கில் 2500 புள்ளிகள் குவிக்க வேண்டி இருந்தது.
இதைத்தொடர்ந்து பிரஞ்ஞானந்தா, தனது 9வது சுற்றுப் போட்டியில், ரேட்டிங்கில் 2514புள்ளிகள் பெற்ற நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த புருஜெஸ்சர்ஸ் ரோலாந்தை எதிர்கொண்டார். இந்தப் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, அவர் ரேட்டிங்கில் 2500 புள்ளிகளைப் பெற்று இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். மேலும், உலகின் மிகக் குறைந்த வயதுடைய கிராண்ட் மாஸ்டர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
ஒரு கிராண்ட் மாஸ்டராக மாற மூன்று படிகள் உள்ளன, கடந்த ஆண்டு உலக ஜூனியர் சாம்பியியன் ஷிப் போட்டியில் வென்று அவர் தனது முதல் படியையும், கிரீஸில் நடந்த ரவுண்ட் ராபின் போட்டியில் வென்று இரண்டாவது படியும் நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து, Elo ரேட்டிங்கில் 2500 புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற மூன்றாவது படியை அவர் நிறைவேற்றியுள்ளார்.
இந்தப் பட்டியலில், 2002 ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற உக்ரைனைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாகின் (12 வயது 7 மாதங்கள்) முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவை, செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News