@AngeliqueKerber. #usopen pic.twitter.com/jrwj42oQj9 Do the shuffle, Angie! #usopen @AngeliqueKerber pic.twitter.com/YkqsTglKFu
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யூ.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இப்போட்டியின் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இதில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் கச் குடியரசின் ரோலின் பிலிஸ்கோவா மோதினர். இப்போட்டியில் ஏஞ்சலிக் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ரோலின் பிலிஸ்கோவாவை வீழ்த்தி யூ.எஸ் கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்றார்.
இப்பட்டத்தை பெறுவதன் மூலம் கெர்பர் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். கெர்பர் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபி கிராம் 1996ம் ஆண்டு யூ.எஸ் கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்றிருந்தார். சரியாக 10 வருடங்களுக்கு பிறகு ஜெர்மனி பெண்கள் சார்பாக கெர்பர் இந்த பட்டத்தை வென்றுள்ளார்.
Mobile AppDownload Get Updated News