பாங்காக்கில் உலக சாம்பியன்ஷிப் ஸ்னூக்கர் தொடர் நடக்கிறது. இதில் 15 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி அரையிறுதியில் சீனாவின் டிங் ஜுன்குயியை எதிர்கொண்டார். இதில் அத்வாணி தோல்வியடைந்த போதும், வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.
முன்னதாக இவர் பங்கேற்க இருந்த காலிறுதி போட்டியின் எதிரணி வீரர் மைக்கேல் ஹோல்ட், தனது சொந்தகாரணங்க்ளுக்காக போட்டியில் இருந்துவிலகியதால் அத்வாணி போட்டியின்றி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதுகுறித்து அத்வானி கூறுகையில், 'லீக் போட்டிகளில் டிங்கை வீழ்த்தினேன். ஆனால் அரையிறுதியில் அவர் மிகவும் கவனத்துடன் செயல்பட்டார். இது போன்ற உலக அரங்கில் இந்தியாவுக்காக பதக்கம் வெல்வது மிகவும் பெருமையாக உள்ளது.,' என்றார்.
Mobile AppDownload Get Updated News