ஆசிய அணிகளுக்கான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஈரான் நாட்டின் ஹமாதன் நகரில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா சார்பில் சௌம்யா சுவாமிநாதன் பங்கேற்க இருந்தார்.
இவர் செஸ் தரவரிசையில், இந்திய அளவில் 5வது இடத்திலும் சர்வதேச அளவில் 97வது இடத்திலும் உள்ளார்.
இந்நிலையில், கட்டாயமாக பர்தா அணிந்துதான் விளையாட வேண்டும் என்று அந்நாட்டு அரசு நிர்பந்திப்பதால் போட்டியிலிருந்து விலக சௌம்யா முடிவு செய்துள்ளார். “கட்டாயமாக பர்தா அணிய வேண்டும் என்பது என் அடிப்படை மனித உரிமையைப் பறிப்பதாக உள்ளது” என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்னை ஹீனா சிந்து இதே காரணத்திற்காக ஈரானில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News