Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

கேப்டனின் ஒரு வேண்டுகோள் - அரங்கை நிரப்பிய ரசிகர்கள் - சொன்னதை செய்து காட்டிய சுனில் சேத்ரி

$
0
0

சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய கால்பந்து அணி, கென்யாவை 3-0 என வென்று அசத்தலான திறமையை வெளிப்படுத்தினர்.

இந்தியாவில் கண்டங்களுக்கு இடையேயான (Intercontinental Cup) கால்பந்து போட்டி நடைப்பெற்று வருகின்றது. இதில் இந்தியா, சீன தைபே, நியூசிலாந்து, கென்யா ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

சுனில் சேத்ரி கோரிக்கை :
இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுப் போட்டிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. கிரிக்கெட்டில் ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடருக்கு கிடைக்கும் வரவேற்பு கூட, இந்திய அணி கால்பந்து மற்ற நாடுகளுடன் விளையாடி வெற்றி பெற்ற போது கூட கிடைப்பதில்லை. இதனால் மனமுடைந்த இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி, டுவிட்டரில் ரசிகர்கள் வந்து ஆதரவு தர வேண்டும் என வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், ரசிகர்கள் மைதானத்து வந்து எங்களை விமர்சியுங்கள், திட்டக் கூட செய்யுங்கள். ஆனால் போட்டியை பார்க்க நேரில் வாருங்கள். நீங்கள் வந்தால் தான் எங்களுக்கு உற்சாகமாக இருக்கும் என கெஞ்சி கேட்டுக் கொண்டிருந்தார்.


சுனில் சேத்ரிக்கு ஆதரவாக் இந்திய கிரிக்கெட் கேப்டன் கோலி, சச்சின், ரஹானே உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

நிரம்பிய மைதானம் ;
சுனில் சேத்ரியின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நேற்று கென்யாவுக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் இந்திய ரசிகர்கள் குவிந்தனர். “நான் சுனில் சேத்ரிக்காக வந்துள்ளேன்” என பலரும் பதாகைகளுடன் போட்டியை காண வந்து இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.



இந்தியா அபார வெற்றி :
இந்நிலையில் கென்யாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்தியா 3-0 என அபார வெற்றி பெற்றது. இதில் இந்திய அணிக்காக கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களும், ஜிஜி லல்பெகுலா ஒரு கோ அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தனர்.



இந்திய அணி நன்றி:
வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி வீரர்கள் ரசிகர்களுக்கு மைதானத்தை சுற்றி வந்து நன்றி தெரிவித்தனர்.


Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>