இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கடந்த சில தினங்களுக்கு முன், கால்பந்து விளையாட்டையும் ஆதரிக்கும்படி, தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். இதைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியும் வீடியோ ஒன்றைப் பதிவு செய்தார்.
தற்போது, இன்டர்காண்டினென்ட்டல் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, நேற்று கென்யா அணியை எதிர்கொண்டது. கேப்டன் சுனில் சேத்ரி வேண்டுகோளுக்கு இணங்க, இந்தப் போட்டியைக் காண ரசிகர்கள் அரங்கத்தில் குவிந்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் கென்யா அணியை அபாரமாக வீழ்த்தியது. தனது 100வது போட்டியில் களமிறங்கிய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்கள் அடித்து அசத்தினார்.
Mobile AppDownload Get Updated News