Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சர்ச்சைகள் ‘சைடுல’ இருந்தாலும்,கலக்கிய இந்திய வீரர்கள்!

$
0
0

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் போட்டிகளில் ஊசி சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், கொடி அணிவகுப்பில் இந்திய வீரர்கள் கம்பீரமாக அசத்தினர்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள், வரும் ஏப்ரல் 4 முதல்15 வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர், மருத்துவர்கள் என மொத்தமாக 325 பேருக்கு இந்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இதில் அதிகபட்சமாக தடகளம் ம மற்றும் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் 31 மற்றும் 27 வீரர்கள் பங்கேற்கின்றனர். பளுதூக்குதல் மற்றும் மல்யுத்த போட்டிகளில் 16 மற்றும் 12 போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். 10 பேட்மிண்டன் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

ஊசி சர்ச்சை:
இந்நிலையில் காமன்வெல்த போட்டிகளுக்கான கிராமத்தில் இந்திய வீரர்கள் தங்கியிருந்த அறைகளுக்கு அருகே ஊசி கிடந்ததால் சர்ச்சை எழுந்தது. இதை காமன்வெல்த் அதிகாரிகள் ஒருபுறம் விசாரித்து வருகின்றனர்.
63584656

இந்நிலையில் இன்று கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் இந்திய வீரர்கள் மூவர்ண கொடியுடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். காமன்வெல்த் போட்டிகள் வரும் 5ம் தேதி துவங்குகிறது. துவக்க விழா 4ம் தேதி நடக்கிறது.

GOLD COAST: The Indian athletes seemed unruffled by the syringe controversy that has cast a shadow on their Commonwealth Games build-up as they enthusiastically took part in the flag-hoisting ceremony at the athletes' village on Monday.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>