தமிழ்நாடு தடகள குழு சார்பில் 57வது தேசிய தடகளப் போட்டி சென்னை நேரு மைதானத்தில் நேற்று தொடங்கியது. வரும் 28 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து 950 வீரர்-வீராங்கனைகள் சென்னை வந்துள்ளனர்.
முதல் நாள் போட்டியில் ரயில்வேயை சேர்ந்த சூர்யா பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், சரிதாசிங் குண்டு எறிதலிலும், நீவா நீளம் தாண்டுதலிலும் தங்கம் வென்றனர். சர்வீசசை சேர்ந்த லட்சுமண் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும், தேஜிந்தர்பால் குண்டு எறிதலிலும் தங்கம் வென்றனர். இதில் சூர்யா, லட்சுமண் ஆகிய இருவரும் புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பெண்களுக்கான உயரம் தாண்டதல் போட்டியில் கேரளாவைச் சோ்ந்த ஜினு மாியா மானுவேல் 1.78 மீட்டா் உயரத்தை தாண்டி தங்கம் வென்றாா். மற்றொரு கேரள வீராங்கனையான ஏஞ்சல் தேவசியா 1.76 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கத்தைத் தட்டிச் சென்றாா்.
Mobile AppDownload Get Updated News