அடுத்த 4 - 5 வருடங்களில் கிரிக்கெட் விளையாட்டை விட கபடிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என யு மும்பை அணி கேப்டன் கூல் அனுப் குமார் தெரிவித்துள்ளார்.
அனுப்குமார் பேசியதாவது:
கபடி விளையாட்டு இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகின்றது. மக்கள் கிரிக்கெட் விளையாட்டைப் போல, கபடியையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு சான்று புரோ கபடியை பார்க்க வரும் மக்களே சாட்சி.
உலகளவில் கபடிப் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. உலகக் கோப்பை கபடிப் போட்டியில், இந்திய அணி சார்பாக நான் 3 முறை விளையாடியுள்ளேன். அந்த மூன்று போட்டி தொடரிலும் இந்தியா கோப்பை வென்றது பெருமையளிக்கின்றது.
![]()
நான் பிறந்த ஊரான ஹரியானா மட்டுமில்லாமல், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களில் கபடிப்போட்டி வேகமாக வளர்ந்து வருகின்றது. எப்படி என்றால், இந்த மாநிலங்களில் உள்ள மாவட்டம் தோறும் 25-30 கபடி அணிகள் உருவாகி வருகின்றன. அனைத்து வீரர்களும் சாதிக்க துடிக்கின்றனர்.
வீரர்கள் அதிகம் உருவாகின்றனர் என்றாலே அந்த போட்டியை ரசிப்பவர்களும் அதிகமாக உருவாகத்தான் செய்வார்கள். இதனால் அடுத்த 5 வருடங்களில் கிரிக்கெட்டை விட கபடி போட்டிக்கும் அதிக வரவேற்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
அனுப்குமார் பேசியதாவது:
கபடி விளையாட்டு இந்தியாவில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகின்றது. மக்கள் கிரிக்கெட் விளையாட்டைப் போல, கபடியையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டனர். இதற்கு சான்று புரோ கபடியை பார்க்க வரும் மக்களே சாட்சி.
உலகளவில் கபடிப் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. உலகக் கோப்பை கபடிப் போட்டியில், இந்திய அணி சார்பாக நான் 3 முறை விளையாடியுள்ளேன். அந்த மூன்று போட்டி தொடரிலும் இந்தியா கோப்பை வென்றது பெருமையளிக்கின்றது.
நான் பிறந்த ஊரான ஹரியானா மட்டுமில்லாமல், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் மற்ற மாநிலங்களில் கபடிப்போட்டி வேகமாக வளர்ந்து வருகின்றது. எப்படி என்றால், இந்த மாநிலங்களில் உள்ள மாவட்டம் தோறும் 25-30 கபடி அணிகள் உருவாகி வருகின்றன. அனைத்து வீரர்களும் சாதிக்க துடிக்கின்றனர்.
வீரர்கள் அதிகம் உருவாகின்றனர் என்றாலே அந்த போட்டியை ரசிப்பவர்களும் அதிகமாக உருவாகத்தான் செய்வார்கள். இதனால் அடுத்த 5 வருடங்களில் கிரிக்கெட்டை விட கபடி போட்டிக்கும் அதிக வரவேற்பு இருக்கும் என தெரிவித்துள்ளார்.
Mobile AppDownload Get Updated News