ஐதராபாத்: புரோ கபடி லீக் தொடரின் முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
புரோ கபடி லீக்கின் 5வது சீசன் இன்று துவங்கியது. ஐதராபாத் நகரில் நடந்த இதன் துவக்க விழாவில் சச்சின், அக்ஷய் குமார், சிரஞ்சீவி, ராம்சரண், ராணா டகுபதி, அல்லு அர்ஜுன், பாட்மின்டன் வீரர்கள் பிவி சிந்து, பயிற்சியாளர் கோபிசந்த், உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து நடந்த முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் 11-17 என பின்தங்கியிருந்த தமிழ் தலைவாஸ், இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருப்பினும் கடைசி நேரத்தில் தெலுங்கு டைடன்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பான ரைடுகளால் மிரட்ட, 32-27 என்ற புள்ளிகளில் போராடி தோல்வியை சந்தித்தது.
Mobile AppDownload Get Updated News