பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–3’ வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, நம்பர்-4 வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால் மோதினர்.
இதன் முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய நடால், இரண்டாவது செட்டை 6–3 என தன்வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய நடால், 6–1 என மிகச்சுலபமாக வென்றார்.
முடிவில் ஸ்பெயினின் நடால் 6–2, 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் 10வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தார்.
RAFAEL NADAL WINS THE FRENCH OPEN
Mobile AppDownload Get Updated News