Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

பார்வையற்ற இந்தியர் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு புதிய சாதனை..!

பார்வை மாற்றுத்திறன் கொண்ட இந்தியர் ஒருவர், பிரபல பாஸ்டன் மராத்தானில் கலந்து கொண்டு போட்டி தூரத்தை முழுமையாக கடந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவின் உள்ள பாஸ்டன் நகரில் நடைபெறும் மராத்தான் போட்டி, மிகவும் கடினமான, போட்டி அதிகமுள்ள மராத்தான் போட்டியாக கருதப்படுகிறது. இந்நிலையில் பெங்களூரைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளியான சாகர் பஹேட்டி என்பவர், பாஸ்டன் மராத்தானில் கலந்து கொண்டிருப்பது மட்டுமின்றி, போட்டி தூரத்தை முழுமையாக கடந்துள்ளார். சர்வதேச மராத்தான் போட்டியில், பார்வையற்ற இந்தியர் ஒருவர் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மாசூசெட்ஸ் பார்வையற்றோர் சங்கம், சாகருக்கு இந்த வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளது. மராத்தானில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகளையும் அந்த அமைப்பு செய்திருந்தது. கல்லூரி நண்பரும், தற்போது அமெரிக்காவில் பணிபுரிந்து வருபவருமான தேவிகா நரேனின் உதவியோடு சாகர் பாஸ்டன் மராத்தான் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற 121-வது பாஸ்டன் மராத்தானில் சுமார் 30,000 பேர் பங்கேற்றனர். இந்த மராத்தான் போட்டியின் போது நிலவிய வெப்பநிலையானது, கடந்த பத்தாண்டுகளில் நிலவிய அதிகபட்ச வெப்பநிலைகளில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

ஆனால் இதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் உற்சாகமாக மராத்தானில் கலந்து கொண்ட சாகர், நான்கு மணி நேரத்தில் 42 கி.மீ தூரம் கொண்ட போட்டி தூரத்தை கடந்தார். தனது மகனின் இந்த சாதனையை பார்ப்பதற்காக சாகரின் பெற்றோர்களும் அமெரிக்கா வந்திருந்தனர்.

அரிய வகை கண் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாகருக்கு, கடந்த 2013-ஆம் ஆண்டு முழுமையாக கண் பார்வை பறிபோனது. அடிப்படையில் தொழிலதிபரான சாகர், சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Visually impaired Indian runner Sagar Baheti completes historic Boston Marathon

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


இரண்டு பழைய புத்தகங்கள்!


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 700 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


ஆசீர்வாத மந்திரங்கள்


வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 13


கவியோகி சுத்தானந்த பாரதியார்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>