First time in the history that two Indians will play in men's singles Superseries final. @srikidambi v @saiprneeth92 in #SingaporeSS FINAL pic.twitter.com/Iinmbzynja
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் தென் கொரிய வீரர் லீ டோங் கியூனை எதிர்கொண்ட இந்திய வீரர் சாய் பிரனீத் 35 நிமிடங்களிலேயே ஆட்டத்தை முடித்து வெற்றி பெற்றார். 21-6, 21-8 என்ற நேர் செட்களில் எளிதாக வெற்றி பெற்ற அவர் சிங்கப்பூர் ஓபன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அசத்திய இந்திய வீரர் ஸ்ரீகாந்த் கிடாம்பி இந்தோனேஷிய வீரர் ஆண்டனி சின்சுகாவை எதிர்த்து விளையாடினார். இதில், 21-13, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஸ்ரீகாந்த், சக இந்திய வீரர் சாய் ப்ரனீத்தை எதிர்த்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுவார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இரு இந்திய வீரர்கள் களமிறங்கவுள்ளது இதுவே முதல் முறையாகும்.
சிங்கப்பூர் ஓபன் மகளிர் பிரிவில் சாய்னா, சிந்து ஆகியோர் ஏமாற்றிய நிலையில் இரு இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய பேட்மிண்டன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Mobile AppDownload Get Updated News