பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 வரை பெண்களுக்கான ஸ்வாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனைகளான ஜோஸ்னா சின்னப்பா, தீபிகா பல்லீகல் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இவர்களைத்தவிர அகன்ஷா, சுனைனா குருவிலா உள்ளிட்ட வளர்ந்து வரும் வீரர்களும் பங்கேற்றவுள்ளனர். இவர்கள் இன்று பாரீஸ் புறப்பட்டுச்சென்றனர்.
இலக்கு என்ன?
இத்தொடர் குறித்து ஜோஸ்னா கூறியது:
முதலில் இத்தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறுவது தான் எங்களின் முதல் இலக்கு. பின் அங்கிருந்து அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கான திட்டத்தை செயல்படுத்துவோம். தற்போது உள்ள பார்ம் தன்நம்பிக்கையை அதிகரித்துள்ளது. தீபிகாவும் அதிக போட்டிகளில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஜோஸ்னா கூறினார்
Mobile AppDownload Get Updated News