புஷாவ்: சீன ஓபன் பாட்மிண்டன் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.
சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடக்கிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்திய நாயகி, பி.வி.சிந்து, அமெரிக்காவின் ஜாங்கை எதிர்கொண்டார்.
இதன் முதல் செட்டை 18-21 என இழந்த சிந்து, இரண்டாவது செட்டை 22-20 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து நடந்த மூன்றாவது செட்டில் அசத்திய சிந்து, 21-17 என வென்றார்.
இறுதியில், இந்தியாவின் சிந்து, அமெரிக்காவின் ஜாங்கை, 18-21, 22-20, 21-17 என் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
Mobile AppDownload Get Updated News