ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில், பல்வேறு தடகள போட்டிகள் நடைபெறுகின்றது. அதில் 90 முதல் 95 வயது முதியோர்களுக்கான 5000 மீட்டர் வேகநடைப் போட்டியும் ஒன்று. இதில் கலந்துகொண்ட, விசாகப்பட்டினத்தை சேர்ந்த இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரியான ஸ்ரீராமுலு தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
மேலும், இந்த வாரம் நடைபெற உள்ள 10 மற்றும் 20 கி.மீ. வேகநடைப் போட்டியிலும் ஸ்ரீராமுலு கலந்துகொள்ள உள்ளார். இதற்கு முன்பு நடைபெற்ற பல்வேறு மாஸ்டர்ஸ் தடகளப் போட்டிகளிலும் இவர் பங்கேற்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Mobile AppDownload Get Updated News