Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

Ronaldo: 'நீங்கதான் சிறந்தவர்'...உருக்கமான அறிக்கை வெளியிட்ட..ரொனால்டோவுக்கு கோலி மெசேஜ்!

$
0
0

கத்தாரில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து 2022 தொடரில் எதிர்பாராத தோல்வி, மிகப்பெரிய வெற்றி என வரலாற்றை திருத்தி எழுதும் அளவிற்கு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த பட்டியலில் போர்ச்சுகல் நாட்டின் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் சேர்ந்து கொண்டார். சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல் அடித்தவர். யூரோ முதல் சிரீ ஏ வரை ஏராளமான கோப்பைகளை வென்றிருக்கிறார்.

போர்ச்சுகல் அணி தோல்வி

அவருக்கு எட்டாத ஒரே ஒரு விஷயம் உலகக்கோப்பை. 5 தொடர்களில் விளையாடியும் கனவை நிறைவேற்ற முடியவில்லை. நடப்பு தொடரில் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியுடன் 1-0 என்ற கோல்கணக்கில் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியது. இதனால் கண்ணீருடன் ரொனால்டோ வெளியேறியது ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அடுத்தது கிளப் அணிக்காக விளையாட வேண்டும்.

இன்ஸ்டாகிராம் பதிவு

ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து வெளியேறி விட்டதால் புதிய கிளப் என்னவென்று தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் உலகக்கோப்பை தொடரின் தோல்வி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொனால்டோ பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், ''16 வருடங்களாக 5 உலகக் கோப்பையில் விளையாடியிருக்கிறேன். கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்ற ஒரே குறிகோளில்தான் அனைத்து போட்டிகளில் விளையாடினேன். கிளப் மற்றும் போர்ச்சுகல் அணிக்காக ஏராளமான கோப்பைகளை வென்று தந்திருக்கிறேன். ஆனால் உலகின் மிகப்பெரிய கோப்பையில் என்னுடைய பெயரை பதிவு செய்ய வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை'' எனக் கூறியுள்ளார்.

ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்

“இந்த விஷயம் குறித்து பல்வேறு விதமாக பேசுகிறார்கள். பத்திரிகைகளில் வெவ்வேறு விதமாக எழுதுகிறார்கள். ஆனால் போர்ச்சுகல் அணிக்கான என்னுடைய அர்ப்பணிப்பு ஒருபோதும் மாறாது. எங்கள் அணி கோல் அடிப்பதற்காக ஒவ்வொரு கணமும் போராடிக் கொண்டே இருப்பேன். என்னுடைய நாடு மற்றும் தேசிய அணியை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.”

அடுத்தகட்ட முடிவு

“இந்த இடத்தில் வேறு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. போர்ச்சுகல் அணிக்கு நன்றி. கத்தாருக்கு நன்றி. என்னுடைய கனவிற்காக போராடும் வரை அது அழகாக தான் இருந்தது. இனி அடுத்தகட்ட இலக்கை நோக்கி பயணிப்பதற்கு, அதற்கான முடிவை எடுப்பதற்கு என்னை முழு மனதுடன் அனுமதிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

கோலி ட்வீட்:

இந்நிலையில் ரொனால்டோ குறித்து, விராட் கோலி இன்ஸ்டா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘கால்பந்து விளையாட்டுக்காக நீங்கள் செய்த சாதனைகளையும், ரசிகர்களுக்கு நீங்கள் கொடுத்த உணர்வுகளையும் ஒரு கோப்பையின் மூலமாகவோ, ஒரு பட்டத்தின் மூலமாகவோ குறிப்பிட முடியாது. ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எந்தவொரு பட்டம் கொண்டும் விளக்க முடியாது. நானும், என்னை போன்ற ரசிகர்களும் உங்கள் விளையாட்டை பார்க்கும் போது ஏற்படும் உணர்வை எந்த சொல் கொண்டு விவரிக்க முடியாது’’

‘‘அது கடவுள் கொடுத்த வரம் தான். ஒவ்வொரு முறை களம் புகும்போதும் முழுமையான அர்ப்பணிப்புடன் விளையாடும் ஒரு வீரனுக்கு கடவுள் கொடுத்த ஆசீர்வாதம். என்னை போன்ற ஏராளமான விளையாட்டு வீரர்களுக்கு நீங்கள் மிகப்பெரிய உத்வேகம். கால்பந்து விளையாட்டின் அனைத்து காலங்களுக்குமான சிறந்த வீரர் நீங்களே’’ என கோலி பதிவிட்டுள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>