Quantcast
Viewing all articles
Browse latest Browse all 2245

தமிழகத்தில் நடக்கும் செஸ்ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதலிடம் ;

இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் செஸ்ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற செஸ்ஒலிம்பியாட் துவக்க விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

போட்டி தொடங்கிய முதல் சுற்றில் இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், தொடர்ந்து நடந்த போட்டிகளில் சில தோல்விகளை சந்தித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆடவர் 'பி' அணியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவினார். இருந்த போதும், எஞ்சிய வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் 'பி' அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, முதலிடத்தில் நீடித்து நேற்று நடந்த 7வது சுற்றில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி முன்னிலையில் உள்ளனர்.

இந்திய அணிகளுக்கிடையே போட்டி

நடந்து முடிந்த 6வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'சி' அணியை இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. நேற்று நடந்த 7வது சுற்றில் அசர்பைஜான் அணியுடன் விளையாடியது. இப்போட்டியிலும் இந்திய ஏ அணி வெற்றி பெற்று சிறப்பாக விளையாடியது. இந்தியா ஏ அணியின் முக்கிய வீராங்கனையான ஹம்பி கோனேரு தோல்வியடைந்தாலும், வைஷாலி மற்றும் டானியா சச்தேவ் ஆகியோர் 2.5-1.5 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி மொத்தம் 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து உக்ரைன், அர்மீனியா, ஜார்ஜியா அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா

இதேபோல் இந்திய பி அணி, 7வது சுற்றில் கியூபா அணியை 3.5-0.5 என்ற புள்ளி கணக்கில் வென்றது. இந்திய அணிக்கு இந்திய பி அணிக்கு 6வது வெற்றியாகும். 7வது சுற்று ஆட்டத்தில் இந்திய 'பி' அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் பிரக்ஞானந்தா,கியூபா வீரர் இசான் ரெய்னால்டோ ஆகியோர் மோதினர். இதில் கியூபா வீரர் இசான் ரெய்னால்டோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 41-வது நகர்தலில் ரெய்னால்டோவை வீழ்த்தி வெற்றிபெற்று சிறப்பாக விளையாடினார்.








Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>