முதலிடத்தில் இந்திய அணி
நேற்று நடந்த முதல் சுற்றில் வெற்றி இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணிக்கான இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி சார்பில் விளையாடும் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளைஞன் பிரக்ஞானந்தாவிற்கு நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய ஆடவர் பி பிரிவில் எஸ்டானியா நாட்டை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.
இரண்டாவது சுற்றிலும் இந்திய அணியின் தமிழக வீரர்கள் வெற்றி
நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது சுற்றில் இந்தியா சார்பில் விளையாடிய தமிழக வீரர்களில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். மெக்சிகோவை எதிர்த்து விளையாடிய, இந்திய அணி ஆடவர் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார்.
சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாடிய இந்தியா மகளிர் சி அணியில் தமிழக வீராங்கனை பி.வி நந்திதாவும் வெற்றி இரண்டாவது சுற்று போட்டியில் வெற்றி பெற்று, மூன்றவது சுற்றுக்கு முன்னேறினார்.
Mobile AppDownload Get Updated News