Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ''தமிழக வீரர்கள் வெற்றி'' ; இந்திய அணி இரண்டாவது சுற்றிலும் வெற்றி.

$
0
0

முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நடந்து முடிந்த செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். போட்டிக்கான சிறப்பு ஏற்பாடுகள் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் முதல் முறையாக நடக்கும் செஸ்ஒலிம்பியாட் தமிழகத்தில் நடப்பதால் தமிழக அரசு வெகு சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தது.

முதலிடத்தில் இந்திய அணி

நேற்று நடந்த முதல் சுற்றில் வெற்றி இந்திய அணி முழுமையாக வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து இந்திய அணிக்கான இரண்டாவது சுற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி சார்பில் விளையாடும் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளைஞன் பிரக்ஞானந்தாவிற்கு நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய ஆடவர் பி பிரிவில் எஸ்டானியா நாட்டை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடுகிறார்.

இரண்டாவது சுற்றிலும் இந்திய அணியின் தமிழக வீரர்கள் வெற்றி

நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது சுற்றில் இந்தியா சார்பில் விளையாடிய தமிழக வீரர்களில் இருவர் வெற்றி பெற்றுள்ளனர். மெக்சிகோவை எதிர்த்து விளையாடிய, இந்திய அணி ஆடவர் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார்.

சிங்கப்பூர் அணியை எதிர்த்து விளையாடிய இந்தியா மகளிர் சி அணியில் தமிழக வீராங்கனை பி.வி நந்திதாவும் வெற்றி இரண்டாவது சுற்று போட்டியில் வெற்றி பெற்று, மூன்றவது சுற்றுக்கு முன்னேறினார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>