Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஜெர்மனி பயிற்சியாளர் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு: கிளாப் அதிரடி பதில்

$
0
0

கடந்த 2006ஆம் ஆண்டு ஜெர்மனி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜோசிம் லோ தொடர்ந்து அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்து 2014 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலக கோப்பையை ஜெர்மனி அணிக்கு வென்று தந்தார். மட்டுமல்லாமல் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையையும் வென்றார். 2018 ஆம் ஆண்டு ரஷ்யா நாட்டில் நடைபெற்ற உலக கோப்பையில் லீக் சுற்றில் வெளியேறியது ஜெர்மனி அணி. இது பலருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

கடந்த சில ஆண்டுகளாக கால்பந்து உலகையே ஆதிக்கம் செலுத்தி வந்த அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு கடும் ஏமாற்றம் ஆக அமைந்தது. சமீபகாலமாக ஜெர்மனி அணி அஞ்சக் கூடிய ஒரு அணியாக பார்க்கப்பட்டாலும் கோப்பைகளை குவிக்கும் ஒரு அணியாக பார்க்கப்படவில்லை. ஆட்டங்களில் வெற்றி அடைந்தாலும் 2014ஆம் ஆண்டு ஜெர்மனி ஆடிய ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்துவது போல தற்பொழுது இல்லை. இதனால் தொடர்ந்து ஜோசிம் லோவின் எதிர்காலம் பற்றிய கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. ஆனாலும் ஜெர்மனி கால்பந்து நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து அவருக்கு தங்களுடைய ஆதரவு குரல் கொடுத்து வந்தது.

இந்நிலையில் இன்று ஜோசிம் லோ முன்வந்து இந்த ஆண்டு ஜூன் மாதம் நடக்கவிருக்கும் யூரோ போட்டிகள் முடிவடைந்ததும் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனவே யார் அடுத்த ஜெர்மனி அணியின் பயிற்சியாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய நிலையில் 3 நபர்களின் பெயர் பேசப்பட்டு வருகிறது, அதில் ஒருவர் லிவர்பூல் அணியின் மேலாளர் ஆன கிளாப். ஆனால் இன்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தான் லிவர்பூல் அணியில் மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் ஆகி இருப்பதை சுட்டிக்காட்டி, ஒப்பந்தம் முடியும் வரை லிவர்பூல் அணியை விட்டு வெளியேறப் போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன் மேலாளராக செயல்பட்ட டார்ட்மண்ட் மற்றும் மைன்ஸ் அணியிலும் தான் ஒப்பந்தம் நிறைவேறும் வரை பணியாற்றியதை சுட்டிக்காட்டினார். எனவே அவர் வெளியேற மாட்டார் என்பதை அறிந்த லிவர்பூல் அணியினர் கொண்டாடி வருகின்றனர். மற்றொரு பெயர் பேயர்ன் மியூனிக் அணியின் மேலாளரான ஹான்சி ஃபிலிக். கடந்த சீசனில் பாதியில் பேயர்ன் அணியின் மேலாளராக நியமிக்கப்பட்ட இவர், கடந்த சீசனில் 6 கோப்பைகளில் வென்று தந்தார். மட்டுமல்லாமல் 2014 ஆம் ஆண்டு ஜெர்மனி உலக கோப்பை வெல்லும் பொழுது துணைப் பயிற்சியாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

81414902

மற்றொருவர் லைப்சிக் அணியின் முன்னாள் மேலாளரான ராக்னரிக். இவர் லைப்சிக் அணி தற்போது புன்டஸ்லீகாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதற்கு ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறார். யார் அடுத்த பயிற்சியாளர் என்பது இன்னும் ஐந்து மாதத்திற்குள் தெரிந்துவிடும்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>