சாந்தியின் பதக்கத்தை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. தற்போது தேசிய விளையாட்டு ஆணையத்தின் ஒப்பந்த பயிற்சியாளராக உள்ள சாந்தி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்.
இவர் கடந்த 2066ம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில், 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். இருப்பினும் அதன்பின் அவருக்கு நடத்தப்பட்ட பாலியல் சோதனையில் எதிர்மறை முடிவு வந்ததால் பதக்கம் திறும்பப்பெறப்பட்டது. இந்த சர்ச்சையை அடுத்து, சாந்தி அடுத்தடுத்த விளையாட்டு போட்டிகளில் பங்குபெறுவது தடைஏற்பட்டது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு பயிற்சியாளர் வேலை வழங்கியுள்ளது.இதுகுறித்து சாந்தி கூறியதாவது, “10 ஆண்டுகளுக்கு முன் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு சிரமப்பட்ட நான், செங்கல் சூளையில் வேலைபார்த்தேன். பல்வேறு முயற்சிகளால் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றேன். சர்வதேச அளவில் 11 பதங்கங்களும், தேசிய அளவில் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களும் வென்றுள்ளேன். தமிழக அரசு பயிற்சியாளர் வேலை அளித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க முயற்சி செய்வேன்” என கூறியுள்ளார்.
சாந்தி தான் வென்ற ஆசிய போட்டி பதக்கத்தை மீட்க பிரதமர் மோடி உதவ வேண்டும் என கூறி அவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
Mobile AppDownload Get Updated News