Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

இறுதி நிமிடத்தில் கோல் அடித்து மோகன் பேகன் டிரா: ஹைதராபாத் அணி ஏமாற்றம்

$
0
0

இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் 103வது ஆட்டம் நேற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மோகன் பேகன் அணிக்கும் நான்காம் இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.

இவ்விரு அணிகள் மோதிய முதல் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. ஹைதராபாத் அணியினர் கடந்த பத்து ஆட்டங்களாக தோல்வியை தழுவாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர், ஆனால் மறுமுனையில் மோகன் பேகன் அணியினர் கடந்த 5 ஆட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலாம் இடத்தை வகிக்கின்றனர்.
81164142

லீக் போட்டியில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் மிச்சம் இருக்கும் நிலையில், ஹைதராபாத் அணியினர் இரண்டிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது உறுதி ஆகி விடும் எனவே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கினர் ஹைதரபாத் அணியினர். மறுமுனையில் எஞ்சியிருக்கும் இரண்டு ஆட்டங்களில் இரண்டு புள்ளிகள் எடுத்தால் முதலிடத்தை உறுதி செய்து விடலாம் என்பதனால் மோகன் பேகன் அணியினர் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கினர். இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக முக்கியமான ஒரு ஆட்டமாக அமைகிறது. எனவே இரு அணியினரும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடு களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயே தங்களது தடுப்பு ஆட்டக்காரரை இழந்தனர் ஹைதராபாத் அணியினர். மோகன் பேகன் அணியைச் சேர்ந்த வில்லியம்ஸ்ஸை ஹைதராபாத் அணியின் தடுப்பு ஆட்டக்காரரான சிங்லென்செனா மிக மோசமான முறையில் தட்டி விட்டதால் அவர் சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு களமிறங்கிய ஹைதராபாத் அணியினருக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்தது. சற்றும் மனம் தளராத ஹைதராபாத் அணியினர் ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்து முன்னிலை பெற்றனர். ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அரிடேன் அடித்த கோலின் மூலம் நடப்பு சீசனில் தனது பத்தாவது கோலைப்பதிவு செய்தார். முன்னிலை பெற்றதும் ஹைதராபாத் அணியினர் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
81157150

மோகன் பேகன் அணியினர் ஆட்டத்தை வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தாக்குதல் நடத்தினர். அணியின் நட்சத்திர வீரரான ராய் கிருஷ்ணா, வில்லியம்ஸ் ஆகியோர் நடத்திய தாக்குதல்கள் எதுவும் கோலாக மாறவில்லை, ஹைதராபாத் அணியில் 10 பேர் மட்டுமே களத்தில் இருந்தனர், மோகன் பேகன் அணியினருக்கு பெரும் சாதகமாக அமைந்தாலும் அவர்களால் ஹைதராபாத் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி கோல் அடிக்க முடியவில்லை. முதல் பாதி 1-0 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக முடிந்தது.

வெற்றி பெற வேண்டும் என்று இரு அணியினரும் களம் இறங்கினர், ஏற்கனவே ஒரு கோல் முன்னிலையில் இருக்கும் ஹைதராபாத் அணியினர் முதல் பாதியை போலவே இரண்டாம் பாதி துவக்கத்திலும் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர், ஆனால் இம்முறை மோகன் பேகன் அணியின் மன்விர் சிங் ஹைதராபாத் அணியின் தடுப்பு ஆட்டத்தை மீறி ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.

ஆட்டம் சமநிலை பெற்றதும் ஹைதராபாத் அணியினரை தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட அழைக்கப்பட்டனர், அணியில் 10 பேர் மட்டும் இருந்த காரணத்தால் ஹைதராபாத் அணியினர் சற்று கவனமாகவே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் மோகன் பேகன் அணியின் தடுப்புச் ஆட்டத்தை மீறி ஹைதராபாத் அணியினர் நடத்திய தாக்குதல்கள் எதுவும் செல்லவில்லை.
81167952

ஹைதராபாத் அணி அல்பர்க் இறுதியாக ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் ஹைதராபாத் அணிக்கு மீண்டும் முன்னிலை பெற்றுத் தந்தார். ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் முன்னிலை பெற்ற ஹைதரபாத் அணியினர் முற்றிலுமாக தடுப்பு ஆட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார், ஆட்டத்தில் எஞ்சியிருக்கும் 10 நிமிடங்களும் ஹைதராபாத் அணியினர் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் மோகன் பேகன் அணியின் வில்லியம்ஸ் கொடுத்த கிராஸ்ஸை ரானே தலையால் முட்டி கோவில் பக்கம் திருப்பி விட அதை ஹைதராபாத் அணியின் கோல்கீப்பர் கட்டிமனி தட்டிவிட பந்து கோட்டலுக்கு செல்ல அதை அவர் கோலாக மாற்றினார். ஆட்டத்தின் இறுதியில் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது ஆட்டம்.

இந்த வெற்றியின் மூலம் மோகன் பேகன் அணியினர் முதலிடத்தில் நீடிக்கிறது, மற்றும் ஹைதராபாத் அணியினர் நான்காம் இடத்தில் நீடிக்கின்றனர்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


கொங்கு சனங்களின் கதை பேசும் “விசாலம்”


27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்


சித்தன் அருள் - 1871 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமான் வாக்கு - 2!


ஆசீர்வாத மந்திரங்கள்


அகிலா மாமி அளித்த ஆனந்தம் !


வண்ணநிலவனின் பொருமல்


ஆவண எழுத்தர் நல நிதிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை: தமிழக அரசு அறிவிப்பு


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


லலிதாம்பிகையின் பிரதான மந்திரம் –பஞ்சதசி!


27 வகையான யோகங்களும் அவற்றின் பலன்களும்



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>