Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

சீனாவில் மீண்டும் கொரோனா: விலையுயர்ந்த விளையாட்டுப் பொருள்கள்!

$
0
0

சீன நாட்டின் உகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளதால் அங்கு பொருட்களின் உற்பத்தி பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், டென்னிஸ், பேட்மிண்டன் போன்ற விளையாட்டு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படவும், விலைகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக வணிகர்கள் கூறியுள்ளனர்.

சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளதால் அங்கு உற்பத்தி பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, இருநாட்டு எல்லை பிரச்சினையால் பதற்றம் அதிகரித்து சீனப் பொருட்களை தடை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்தது. இது போன்ற காரணங்களால் சீனாவிலிருந்து விளையாட்டுப் பொருட்கள் இந்தியா வருவதில் சிக்கல் நீடிக்கிறது.

சென்னை சேப்பாக்கத்தில் விளையாட்டுப் பொருட்கள் கடை வைத்து நடத்தி வரும் சந்திர குமார் சோப்டா, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், “கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், ஐம்பது சதவீத ஆண்டு வருமானத்தை இழந்து நிற்கிறோம். சீனவிலிருந்து வரும் பொருட்கள் கைக்குக் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. ஜுன் மாதத்தில் சில தளர்வுகளுடன் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

இனவாதத்திற்கு எதிராக கைகோர்க்கும் கிரிக்கெட்; இங்கிலாந்து அணியின் அதிரடி!

அந்த சமயங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 500 கேரம் போர்டுகள் விற்பனையானது. தற்போது, கடைகளில் ஒரு கேரம் போர்டு கூட கிடையாது. புதிய இறக்குமதிகள் எதுவும் செய்யப்பட முடியாத நிலைதான் இதற்குக் காரணம். ஒரு காலத்தில் டென்னிஸ், பேட்மிண்ட்டன் போன்ற பொருட்கள் சென்னையில் அதிகளவு தயாரிக்கப்பட்டன. சந்தையில் சீன ஆதிக்கத்திற்குப் பிறகு சென்னையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் உடற்பயிற்சி கருவிகள், அதன் பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களின் மதிப்பு 7,500 கோடி முதல் 8,000 கோடி இருக்கிறது என்றும், இதில் தமிழகத்தில் உள்ள நிறுவனங்களின் பங்கு 350 கோடி முதல் 400 கோடியாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

'தல' தோனி எப்போதும் இளைஞர் தான்... பியூஷ் சாவ்லா பூரிப்பு!!

மொத்த விலை கடைகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ‘எஸ்ஜிதிஏடி’ தலைவரும்’, ‘ஸ்போர்ட்ஸ் சப்ளையர் மெட்ராஸ்’ கடையின் உரிமையாளருமான சன்ஜை ஜான் கூறியுள்ளார். “விளையாட்டுப் பொருட்கள் கடை வைத்து நடத்தி வரும் சில்லறை விற்பனை கடைகளில் வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். ஊடரங்கு காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளதால், மொத்த விலை கடைகளுக்கும், சில்லறை வர்த்தகக் கடைகளுக்கும் உள்ள தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து பொருட்கள் வாங்க இயலவில்லை. ஆகையால், தைவான், கொரியாவில் பொருட்கள் வாங்க முயன்று வருகிறோம். இந்தியாவில் தயாரிக்கப்படும் விளையாட்டுப் பொருட்களின் விலை மிக அதிகம். இங்கு பொருட்கள் வாங்கி வியாபாரம் செய்தால் கட்டுப்படியாகாது’ என்று கூறியுள்ளார்.

சீனா ஒருநாளில் ஒரு மில்லியன் விளையாட்டுப் பொருட்களைத் தயாரிப்பதாகவும், இந்தியாவில் ஒருநாளைக்கு 3000 பொருட்கள் மட்டுமே தயாரிக்கப்படுவதால் விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்கிறது என்றும் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


சித்தன் அருள் - 1881 - அன்புடன் அகத்தியர் - ஈரோடு சத்சங்க வாக்கு ( April 2024...


ஆசீர்வாத மந்திரங்கள்


ச.துரை –நான்கு கவிதைகள்


கணவன் கண் முன்னே துப்பாக்கி முனையில் மனைவி கூட்டு பலாத்காரம்..!


பட்டைய கிளப்பும் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் 2வது டிரைலர்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


ஐஸ்வர்யம் தரும் 5 ஹோமங்கள்


இரண்டு பழைய புத்தகங்கள்!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>