Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஒலிம்பிக்கை ஒத்திவைத்தாலும் என் பதக்க பசி அடங்காது: வெறித்தனமான அமித் பங்கால்!

$
0
0

ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற இருந்தது. இதற்கிடையில் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக வீரர்களின் பாதுகாப்பு கருதி ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

மாறுபட்ட அணி
இதையடுத்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஓராண்டிற்கு ஒத்திவைப்படுவதாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கப்பட்ட முடிவு மிகவும் தவறானது என சிலர் கருத்து தெரிவிக்க துவங்கியுள்ளனர். இதனால் அடுத்த ஆண்டு துவங்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் முற்றிலும் மாறுபட்ட அணியாக காட்சி அளிப்பார்கள்.

பங்கால் உறுதி
ஆசிய ஓசினியா ஒலிம்பிக் தகுதிச்சுற்று 52 கி.கி எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டியில் பிலிப்பைன்ஸ் வீரர் கார்லோ பாலமை வீழ்த்தி இந்தியாவின் அமித் பங்கால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றார். இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளிப்போனதால், பங்காலின் ஒலிம்பிக் கனவு சற்று தள்ளிச் சென்றுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பது குறித்து பங்கால் கூறுகையில், “என் கனவே ஒலிம்பில் பதக்கம் வெல்வது தான். எப்போது ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் எனது பதக்க பசி மட்டும் அடங்காது. என் நாட்டுக்காக நிச்சயமாக ஒலிம்பிக் பதக்கம் வெல்வேன். அதனால் உடல் ஆரோக்கியம் தான் தற்போது முக்கியம்.

74851034

ஒலிம்பிக் போட்டிகளின் ஒத்திவைப்பு என்பது எனக்கு மட்டும் கிடையாது. நல்ல பார்மில் உள்ள டாப் வீரர்களுக்கும் தான். தற்போது ரசிகர்கள், வீரர்கள், நாட்டு மக்கள் ஆகியோரின் பாதுகாப்பு தான் முக்கியத்துவம் வாய்ந்தது. அரசின் முடிவை நான் மதிக்கிறேன். இன்னும் நிறைய நாட்கள் உள்ளது. இன்னும் அதிக பயிற்சி செய்வேன். ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் வரை முழு உடற்தகுதியுடன் இருப்பதே இலக்கு” என்றார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>