இந்தோனேசியா ஓபன் ஓபன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தோனேசிய ஓபன் 2019 பேட்மிண்டன் தொடர் தற்போது இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் உள்ள இஸ்தோரா ஜெலோரா பங்க் மர்னோ உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகின்றது.
இந்தோனேசிய ஓபன் 2019 தொடரில் பெண்கள் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானைச் சேர்ந்த நஜோமி ஒகுஹாராவை வென்று, அரையிறுதியில் சீனாவின் சென் யுஃபெய்யை வீழ்த்தினார்.
வெள்ளிப் பதக்கம்:
இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை எதிர் கொண்டார். இதில் பிவி சிந்து 15-21, 16-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினார். இதன் மூலம் பிவி சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
Mobile AppDownload Get Updated News