இந்தோனேசிய ஓபன் 2019 அரையிறுதி போட்டிக்கு இந்தியாவின் பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
இந்தோனேசிய ஓபன் 2019 பேட்மிண்டன் தொடர் தற்போது இந்தோனேசிய தலைநகர் ஜகர்தாவில் உள்ள இஸ்தோரா ஜெலோரா பங்க் மர்னோ உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகின்றது.
இந்தோனேசிய ஓபன் 2019 தொடரில் பெண்கள் ஒற்றையர் கால் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து, ஜப்பானைச் சேர்ந்த நஜோமி ஒகுஹாராவை எதிர் கொண்டார்.
TNPL 2019 தொடரின் போட்டி முழு அட்டவணை இதோ!
இந்த காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து 21-14, 21-7 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹாராவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
அரையிறுதியில் சீனாவின் சென் யுஃபெய்யை எதிர் கொள்ள உள்ளார்.
Mobile AppDownload Get Updated News