Quantcast
Channel: tamil Samayam
Viewing all articles
Browse latest Browse all 2245

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்து, சாய்னா ஏமாற்றம்.. வெறும் கையுடன் திரும்பிய இந்திய வீரர்கள்!

$
0
0

வுஹான்: ஆசிய பேட்மிண்டன் சாம்பியின்ஷிப் தொடரின் காலிறுதியில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பி.வி.சிந்து, சாய்னா நேவல், சமீர் வர்மா ஆகியோர் தோல்வியடைந்தனர்.

சீனாவின் வுஹானில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் நடக்கிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீரர்களான பி.வி. சிந்து, சாய்னா நேவல் உட்பட் சுமார் 24 பேர் கலந்து கொண்டனர்.

ஏமாற்றம்:
ஆனால் சிந்து, சாய்னா, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு தகுதி பெற்றனர். மற்ற வீரர்கள் லீக் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறினர். இந்நிலையில் காலிறுதி போட்டியில் சிந்து , சாய்னா, சமீர் ஆகியோரும் காலிறுதியில் தோல்வியை சந்தித்தனர்.

வெறும் கை:
இதையடுத்து பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களின் கனவு முடிவுக்கு வந்தது . கடந்த ஆண்டில் இத்தொடரில் சாய்னா, பிரனாய் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்று ஆறுதல் அளித்தனர். ஆனால் இம்முறை இந்தியாவுக்கு வெறும் கையே மிஞ்சியது.
69060840
நேரமின்மை:
இந்த ஏமாற்றமான தொடருக்கு வீரர்களுக்கு போதிய நேரமின்மை தான் காரணம் என பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்துள்ளார். தவிர, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதிச்சுற்று போட்டிகளாக கருதப்படுவதால், புள்ளிகளை தக்கவைப்பது வீரர்களுக்கு மிகவும் அவசியம் என்றார்.

மேலும் ஒரு தொடருக்கு முழுமையாக தயாராக, உதாரணமாக சாய்னா நேவலுக்கு ஐந்தில் இருந்து ஆறு வாரங்கள் தேவைப்படும். ஆனால் தற்போது அவரால் இரண்டு வாரங்கள் மட்டுமே ஒதுக்க முடிவதாக தெரிவித்துள்ளார்.

Mobile AppDownload Get Updated News


Viewing all articles
Browse latest Browse all 2245

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>